சமூக நீதிக் கட்சியின் தவிசாளர், அங்கத்தவர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து விலகுவதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவிப்பு

Date:

சமூக நீதிக் கட்சியின் தவிசாளர் மற்றும் அங்கத்தவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் இராஜினாமா செய்துள்ளதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவித்துள்ளார்.

சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா மொஹமட் அவர்களிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் சமூக நீதிக்கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்த நிலையில் அதற்கு பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு சார்பான பதிவுகளையும் பேஸ்புக் தளத்தில்  பதிவிட்டு வந்தநிலையிலே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் தேசிய சூறா சபையின் தலைவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய கூட்டமொன்றின் மேடையில் ஏறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் அவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...