நபிகளாரின் ஒழுக்க விழுமிய வாழ்வு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நல்லதொரு முன்மாதிரி

Date:

தேசிய ஷூரா சபையின் மீலாத் செய்தி;

“நபியே நீர் மகத்தான பண்பாடுகளோடு இருக்கிறீர்” (அல்குர்ஆன்)

நபிகளார் (ஸல்) அவர்கள் தனது நுபுவத்துக்கு முன்னரான மக்கா வாழ்க்கையில் ஒழுக்க விழுமியங்களுடன், உயர் பண்பாடுகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களை மறுத்து, எதிர்த்து வந்தவர்கள் கூட அன்னாரது நற்குணங்களுக்கு சான்று பகர்ந்தார்கள். இது சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.

நபியவர்கள் தனக்கு நபித்துவம் கிடைப்பதற்க்கு முன்னரே வாய்மை, உண்மை, தைரியம், பொறுமை, சமூக சேவை, மனித சமுதாயத்தின் மீதான அக்கறை, பாவங்களில் இருந்து முற்று முழுதாக தூரமாக இருந்தமை இனபந்துக்களுடனான இறுக்கமான உறவு, அயல் வீட்டாருக்கான உரிமைகளை வழங்குவது போன்ற அடிப்படை பண்புகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

“ஒழுக்க விழுமியங்களை பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என நபி(ஸல்) கூறினார்கள்.

இதனால் அவர்கள் முன்வைத்த தூது அந்த மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாம் என்றாலே பண்பாடுகள் தான் என்ற கருத்து வலுப்பெற்றது.

சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நபியவர்களது இந்த அடிப்படையான பண்புகளை கைக்கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணவேண்டும்.

அல்லாஹ்வின் அருள் கிட்டுவதற்கும், பிற சமூகங்களது நன்மதிப்பை வென்று வாழ்வதற்கும், சமூக ஸ்திரப்பாட்டுக்கும் நபியவர்களது இந்தப் பண்புகளை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்வது அவசியமாகும்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...