பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பள்ளியில் நாளை மீலாத் பரிசளிப்பு விழா..!

Date:

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நாளை 16ம் திகதி திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது பறகஹதெனிய மத்ரசதில் ஜாமி உல் அன்வர், சிங்ஹபுர மத்ரசதுர் ரஹ்மானியா, பண்டாரகல மஸ்ஜிதுன் நூர் ஆகிய குர்ஆன் மதரஸா மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...