மேற்குக் கரை–ஜோர்தான் எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொலை: ஜோர்தான் மக்கள் ஆரவாரம்

Date:

நேற்று ஜோர்தானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அல் காராம என்ற எல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொலைசெய்யப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் மாஹிர் அல் ஜாசி என்ற கொள்கலனை ஓட்டிச்செல்லும் ஒரு சாரதியாவர். இந்த சம்பவம் குறிப்பாக ஜோர்தான் மக்கள் மத்தியில் பரவலாக எழுச்சி மிக்க சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அங்குள்ள மக்கள்  மகிழ்ச்சியும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்திய காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன.

இது இஸ்ரேலை சூழவுள்ள நாடுகளுகளிலே இருக்கின்ற அரேபியர்கள் எந்தளவு தூரம் இஸ்ரேல் அராஜகத்தை வெறுக்கின்றார்கள்.எவ்வளவு தூரம் வெறுப்போடு இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றது.

இந்நிலையில் தமது பக்க எல்லையை மூடியதாக குறிப்பிட்டிருக்கும் ஜோர்தான் இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக  தெரிவித்துள்ளது. ஜோர்தானில் இருந்து பொருட்களை ஏற்றிய வாகனங்கள் மேற்குக் கரைக்கு பயணிக்கும் நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்படத்தக்கது.

 

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...