விசாரணை முடியும் வரை புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் முடியும் வரை பரீட்சை விடைத்தாள் திருத்தம் எதுவும் இடம்பெறாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மேற்படி பரீட்சை மீண்டும் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர்...

“திருக்குர்ஆனை மனனம் செய்வது மூளையின் செயலாக்கத் திறனை அதிகரிக்கும்”: நரம்பியல் பார்வையை விளக்கும் கண் மருத்துவ நிபுணர்!

திருக்குர்ஆனை மனனம் செய்வது வெறும் ஆன்மீக ரீதியான ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது...

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...