வெடிக்கும் புதிய போர்?: லெபனான் மீது இஸ்ரேல் நேரடி குண்டுவீச்சு:274 பேர் பலி; 1இ000க்கும் மேற்பட்டோர் காயம்

Date:

லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 300 இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது மேலும் 1000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகலெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி அனுமதி வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸை அழிப்பதாக கூறி காசாவை நாசம் செய்ததை போல, ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி தற்போது லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது இஸ்ரேல். இதில் அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திய யுக்தி போரின் வரைமுறைகளை மீறுவதாக இருப்பதாக லெபனான் விமர்சித்துள்ளது.

கடந்த ஓராண்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...