அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவூதி அரேபியத் தலைவர்கள்!

Date:

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டதற்கு சவூதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு, பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் மொஹமட் பின் சல்மானும் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...