உயிரிழந்தவர்களை அடக்குவதா? எரிப்பதா என்பதை உயிரிழந்தவரே தீர்மானிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

உயிரிழந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாக தீர்மானிக்கின்ற உரிமையை குறித்த நபருக்கே வழங்குவதற்காகவும் தனது உடலத்தை அகற்ற வேண்டிய விதம் பற்றிய விருப்பத்தை தெரிவிக்காதவர்கள் உயிரிழக்கின்ற போது உயிரிழந்தவரின் அபிலாஷைகள் மற்றும் மத ரீதியான கலாசார அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளை கருத்தில்கொண்டு உயிரிழந்தவரின் உடலத்தை நல்லடக்கம் செய்யவேண்டுமா அல்லது தகனம் செய்யவேண்டுமா என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்நபரின் நெருங்கிய உறவினருக்கு ஒப்படைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை செய்வதற்காக சட்ட வரைஞரால் தாயரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த ஒருங்கிணைவு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...