கஹட்டோவிட்டவில் க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

க. பொ.த சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்ட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 14ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2006 ஆம் ஆண்டு அல் பத்ரியா மகா வித்தியாலயம் சார்பாக க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவினரால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் வளவாளராக உளவியலாளர் எம். ஐ அஹமட் இப்திகார் அவர்கள் கலந்து கொண்டார்.

அல்பத்ரியா மகா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம், அரபா மகா வித்தியாலயம் மற்றும் ஒக்ஸ்போர்ட் சர்வதேசப் பாடசாலை ஆகிய பாடசாலைகளிலிருந்து சுமார் 100 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...