குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Date:

எம் பொக்ஸ் (mpox) எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக  இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறியுடன் முதலாவது நபர் நேற்று (9) அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மேலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் இந்த நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குரங்கு காய்ச்சல் தொடர்பில் விமானநிலையங்கள் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தளங்களிலும் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...