கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமான பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.
இறுதி நாளான இன்று அதி கூடிய ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சிக்கு பங்கு பற்றியமைக்காக உலக சாதனை விருதும் வழங்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் முதல் தடவையாக (21,637 ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.
இந்த நிகழ்வை காண்பதற்காக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல். அஜ்வத் அவர்களும் சென்று அங்கு இந்தப் போட்டி நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த நிகழ்வில் இலங்கை கொட்டராமுல்லையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் காணொளி வடிவமைப்பாளரான முஹம்மது ஸைத் பணியாற்றியுள்ளார்.
அவரது பணிகள் தொடர ‘நியூஸ்நவ்’ மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ன்றது.