சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும்

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது காரியாலயத்தின் திறப்பு விழாவும் பொது கூட்டமும் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை  முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எம்.சி. பைசால் காசிம் ஆகியோரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தவிசாளருமான முழக்கம் எம். அப்துல் மஜீத், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம். ஐ. பிர்தௌஸ் ஆசிரியர் மற்றும் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி சமால்டீன், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், சாய்ந்தமருது மத்திய குழுவின் வட்டார அமைப்பாளர்கள், சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெண்கள் என பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...