சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும்

Date:

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது காரியாலயத்தின் திறப்பு விழாவும் பொது கூட்டமும் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை  முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எம்.சி. பைசால் காசிம் ஆகியோரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தவிசாளருமான முழக்கம் எம். அப்துல் மஜீத், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம். ஐ. பிர்தௌஸ் ஆசிரியர் மற்றும் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி சமால்டீன், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், சாய்ந்தமருது மத்திய குழுவின் வட்டார அமைப்பாளர்கள், சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெண்கள் என பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...