ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Date:

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம்  முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதாவது, செப்டம்பர் 15 ஆம் திகதி 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை  கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், 3,23,879 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...