தபால் மூல வாக்களிப்பு: இதுவரையில் 10 மாவட்டங்களில் அனுர அபார வெற்றி

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முதலிடத்தில் இருக்கின்றார்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அவர் 154,657 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக உள்ள சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 51,982 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 48,970 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் பதினொரு மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அறுரகுமார வெற்றி பெற்றார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வன்னி மாவட்டத்தில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...