திறப்பு விழா நாடாவை வெட்ட முடியாமல் திணறிய மன்னர் சார்ள்ஸ்

Date:

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஒரு மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக இங்கிலாந்தின் 3ஆவது சார்ள்ஸ் மன்னர் கலந்து கொண்டிருந்தார்.

பூக்களுக்கான கண்காட்சி வைபவத்தை திறந்து வைப்பதற்காக திறப்பு நாடாவை வெட்டுவது ஒவ்வொரு விழாக்களில் வழக்கமாகும்.

அந்தவகையில் ஸ்கொட்லாந்தில் நடைபெறும் 200வது ஆண்டு கோடைகால மலர் கண்காட்சிக்கு சார்லஸ் தனியாக விஜயம் செய்தார்.

இதன்போது இந்த கண்காட்சியில் நாடாவை வெட்டுவதற்காக மன்னருக்கு கத்திரிக்கோல் வழங்கப்பட்ட போது வெட்டமுடியாமல் திணறும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.

இந்த வீடியோவில் சார்ள்ஸ்  மன்னர் நாடாவை வெட்டுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதையும் இறுதியாக நாடாவை வெட்டி திறப்பு விழாவை ஆரம்பித்து வைத்ததையும் அதனை பார்த்த கொண்டிருந்த மக்கள ரசித்து சிரிப்பதையும் இந்த வீடியோ காட்டுகின்றது.

என்னதான் உலகத்தில் உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கூட அடிசறுக்கின்ற சந்தர்ப்பங்கள் வரத்தானே செய்யும்.

 

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...