நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள்: கடிதங்கள் அனுப்பி வைப்பு

Date:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத் தலைவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஐந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு, 169 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பொறுப்பு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவர் சுகயீனமுற்றிருப்பதால், சொத்துப் பொறுப்பு அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என அவரது செயலாளர் ஒருவர் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...