நேபாளம் சென்ற கோட்டாபய: அரசியல் பயணமா?

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இலங்கை விமானம் மூலம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது நாட்டில் அமைந்துள்ள பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்திற்காக நேபாளத்தில் உள்ள சௌத்ரி குழுமத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டபய ராஜபக்சவுடன் நேபாளத்தின் முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய உறவுகளைப் பேணிவருவதாகவும், அவர் இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தொடர்புடைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணம் அரசியல் சார்ந்தது அல்ல என்றும், தனிப்பட்ட பயணம் என்றும் மை ரீபப்ளிசியா செய்திச் சேவை மேலும் தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...