பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பள்ளியில் நாளை மீலாத் பரிசளிப்பு விழா..!

Date:

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நாளை 16ம் திகதி திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது பறகஹதெனிய மத்ரசதில் ஜாமி உல் அன்வர், சிங்ஹபுர மத்ரசதுர் ரஹ்மானியா, பண்டாரகல மஸ்ஜிதுன் நூர் ஆகிய குர்ஆன் மதரஸா மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...