பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது!

Date:

காசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசா முனையில் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து, டென்மார்க்கில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில், ‘ஆக்கிரமிப்புக்கு எதிராக மாணவர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், சுவீடனைச் சேர்ந்த 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டார்.

இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான கூட்டமைப்பை கோபன்ஹேகன் பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனவும், இனப்படுகொலைக்கு துணைபோகக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து  பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் , கைது செய்யப்பட்ட நபர்களில் கிரேட்டா தன்பெர்க்கும் ஒருவர் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது பிரச்சாரத்திற்காக பரவலாக அறியப்பட்ட தன்பெர்க் பலஸ்தீனிய விவகாரத்தை பெரிதாக கையிலெடுத்த அவர் ‘எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...