புதிய அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம்; 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Date:

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழைமை கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ச் ஹேஜ்ஜில் (Water’s Edge) இடம்பெற்றது.

இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைவராக தெரிவாகியுள்ளதோடு, குறித்த கட்சியின் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...