பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், “குறிப்பிட்ட விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

10 ரூபாவினால் எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்பு பேருந்து கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்கு போதுமானது அல்ல.

பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றால் எரிபொருளின் விலை 25 ரூபாவினால் சரி குறைக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...