மாணவர்களுக்கான சீருடை துணி தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Date:

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 மாணவர்களுக்கான ஆடைகளும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சீருடைகள் மற்றும் அங்கிகள் விநியோகிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சீன அரசாங்கம் மானியமாக சீருடை துணிகளை வழங்கவுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 100% சீருடைகள் இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் அரசால் 7,000 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும்.

இந்த சீருடைகளின் முதல் தொகுதி நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...