மாணவர்களுக்கான சீருடை துணி தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Date:

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 மாணவர்களுக்கான ஆடைகளும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சீருடைகள் மற்றும் அங்கிகள் விநியோகிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சீன அரசாங்கம் மானியமாக சீருடை துணிகளை வழங்கவுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 100% சீருடைகள் இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் அரசால் 7,000 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும்.

இந்த சீருடைகளின் முதல் தொகுதி நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...