மாணவர்களுக்கான சீருடை துணி தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Date:

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 மாணவர்களுக்கான ஆடைகளும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சீருடைகள் மற்றும் அங்கிகள் விநியோகிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சீன அரசாங்கம் மானியமாக சீருடை துணிகளை வழங்கவுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 100% சீருடைகள் இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் அரசால் 7,000 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும்.

இந்த சீருடைகளின் முதல் தொகுதி நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...