முஸ்லிம் சமூகம் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது?; கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது தொடர்பிலான செயலமர்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தினால் கடந்த ஞாயிறன்று (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் உப தலைவர் பௌசர் பாரூக் தலைமையில் கொழும்பில் நடந்த இந்தச் செயலமர்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் சமூகம் முன்வைக்க வேண்டிய பல கோரிக்கைகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் எடுத்துக் காட்டினார்.

அத்துடன் கடந்த கால தேர்தல் அனுபவங்களை முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ஒமர் காமில் பகிர்ந்து கொண்டார்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் தற்போதைய நிலை தொடர்பிலான கள ஆய்வொன்றும் சபையில் முன்வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...