வெடிக்கும் புதிய போர்?: லெபனான் மீது இஸ்ரேல் நேரடி குண்டுவீச்சு:274 பேர் பலி; 1இ000க்கும் மேற்பட்டோர் காயம்

Date:

லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 300 இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது மேலும் 1000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகலெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி அனுமதி வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸை அழிப்பதாக கூறி காசாவை நாசம் செய்ததை போல, ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி தற்போது லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது இஸ்ரேல். இதில் அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திய யுக்தி போரின் வரைமுறைகளை மீறுவதாக இருப்பதாக லெபனான் விமர்சித்துள்ளது.

கடந்த ஓராண்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...