“2024 ஜனாதிபதி தேர்தல்: இன்று தபால்மூல வாக்குப் பதிவு தொடங்கியது

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவுச் செய்யும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது குறித்த அறிவித்தலை ஜூலை 26ஆம் திகதி தேர்தல்களை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இன்று ஆரம்பமாகவுள்ள தபால்மூல வாக்கு பதிவானது நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் தமது கடமைகளை செய்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய நாள் நிலவரப்படி, தபால் வாக்களிப்பு சீட்டு, வாக்களிக்க தகுதிப்பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 27195, கம்பஹா மாவட்டத்தில் 52486, களுத்துறை மாவட்டத்தில் 37361, காலி மாவட்டத்தில் 41436, மாத்தறை மாவட்டத்தில் 30882 மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22167 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712319 ஆகும்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...