30 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியாத நிலை: தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றச்சாட்டு

Date:

வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிப்புக்கு தேவையான சட்டம் வழங்கப்படாமையால் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு சட்டமன்ற அமைப்பான நாடாளுமன்றமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது நாட்டின் கணிசமான சதவீத மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டத்தில் நாடாளுமன்றமோ அல்லது அதிகாரிகளோ அக்கறை காட்டவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான விசாரணையின் போது தெரிவித்தார்.

கைதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலங்கை விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடைபெறும் எனவும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...