30 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியாத நிலை: தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றச்சாட்டு

Date:

வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிப்புக்கு தேவையான சட்டம் வழங்கப்படாமையால் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு சட்டமன்ற அமைப்பான நாடாளுமன்றமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது நாட்டின் கணிசமான சதவீத மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் கைதிகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டத்தில் நாடாளுமன்றமோ அல்லது அதிகாரிகளோ அக்கறை காட்டவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான விசாரணையின் போது தெரிவித்தார்.

கைதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்ட சீர்திருத்தங்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலங்கை விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடைபெறும் எனவும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...