IMF இல்லாமல் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி நாட்டின் நிதிச் சவால்களை தீர்க்க முடியும் என்று மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் வங்கிகளுடனும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

தமது நாடு எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் தற்காலிகமானவை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு குறைந்து வருவதால் தற்போது மாலைத்தீவு தற்காலிக சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிப்புற நிதி தலையீடு இல்லாமல் அதைத் தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் மூலோபாயத்தில் வரி முறை சீர்திருத்தம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்தல், சீனா மற்றும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் போன்றவை உள்ளடங்கும் என வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...