அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை !

Date:

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சேவையைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தற்போது 5,000 ரூபாய் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
குறித்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2022 ஆம் ஆண்டுவரை அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது சீருடை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை வழங்குதல் தொடர்பாகப் பௌத்த சாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் 2,500ரூபாய் சீருடைக் கொடுப்பனவு என்ற வகையில் வருடாந்தம் 7,500ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...