இஸ்ரேல் – லெபனான் போர் தீவிரம்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Date:

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 7,600 இலங்கை தொழிலாளர்கள் லெபனானில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தென்பகுதிகளில் வசிப்பதாக லெபனான் தூதுவர்  கபில ஜயவீர,  சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பை குறிவைத்து, நாட்டின் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதில், சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உடன் போர் நிறுத்தத்திற்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும், இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.

இந்நிலையிலேயே, லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் மோதல் பிரதேசங்களில் வசிக்கவில்லை என லெபனான் தூதுவர்   சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...