குழந்தைகளின் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நச்சு தகவல் மையத்தின்  தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்

மேலும் வைத்தியரின் பரிந்துரைகளில் பரசிட்டமால் இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் எனினும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பரசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலைமை  மேலும் மோசமான  நிலைமைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

சில பெற்றோர்கள் காய்ச்சலை கண்டறிந்தால் பரசிட்டமாலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு பரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டுமா என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பரசிட்டமால் கொடுக்க வேண்டுமா என்று கட்டாயம்  மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...