சமூக நீதிக் கட்சியின் தவிசாளர், அங்கத்தவர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து விலகுவதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவிப்பு

Date:

சமூக நீதிக் கட்சியின் தவிசாளர் மற்றும் அங்கத்தவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் இராஜினாமா செய்துள்ளதாக சிராஜ் மஷ்ஹூர் அறிவித்துள்ளார்.

சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா மொஹமட் அவர்களிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் சமூக நீதிக்கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியிருந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்த நிலையில் அதற்கு பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு சார்பான பதிவுகளையும் பேஸ்புக் தளத்தில்  பதிவிட்டு வந்தநிலையிலே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் தேசிய சூறா சபையின் தலைவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய கூட்டமொன்றின் மேடையில் ஏறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் அவரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...