தேங்காய் மற்றும் எண்ணெயின் விலை தொடர்பில் வெளியான தகவல்

Date:

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை 400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலையும் 560 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னதாக தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக இருந்தது.

எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...