நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு.

Date:

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் மீலாத் தின சிறப்பு நிகழ்வுகள் இன்று (16)  இடம்பெறுகின்றன.

அந்தவைகயில் பேருவளை, சீனன்கோட்டை தரீக்கதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ரபிய்யுல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கு முகமாக 12 தினங்கள் மௌலீத் ஓதும் நிகழ்வு பத்தை ஸாவியா லேனில் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் சுப்ஹான மௌலீத் ஓதப்படுவதுடன் தமாம் மஜ்லிஸ் இன்று இரவு வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

அதேநேரம் பறகஹதெனிய, ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலின் வருடாந்த மீலாதுன் நபி தின போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா இன்று பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரியபள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122ஆவது வருட புனித ‘சமாயி லுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்’ தமாம் வைபவம் இன்று (16)  நடைபெறும்.

இதேவேளை பேருவளை முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத் தும் மீலாத் விழா மற்றும் மௌலித் மஜ்லிஸ் இன்று பேருவளை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் நடைபெறும்.

முகத்தமுஷ் ஷாதுலி முர்தாஜ் ஸமீம் பொறுப்பாக இருந்து நடாத்தும் நிகழ்வில் உலமாக்கள், வர்த்தகர்கள். மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன உறவை கட்டியெழுப்பும் வகையில் ஏனைய சமூகங்களையும் அழைத்து இவ்விழாவை சிறப்பாக நடாத்த வர்த்தகர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக முர்தாஜ் ஸமீம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...