நேபாளம் சென்ற கோட்டாபய: அரசியல் பயணமா?

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இலங்கை விமானம் மூலம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது நாட்டில் அமைந்துள்ள பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்திற்காக நேபாளத்தில் உள்ள சௌத்ரி குழுமத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டபய ராஜபக்சவுடன் நேபாளத்தின் முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய உறவுகளைப் பேணிவருவதாகவும், அவர் இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தொடர்புடைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணம் அரசியல் சார்ந்தது அல்ல என்றும், தனிப்பட்ட பயணம் என்றும் மை ரீபப்ளிசியா செய்திச் சேவை மேலும் தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...