அறுகம்பைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கை குறித்து விசேட விசாரணை!

Date:

அறுகம்பை பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா விசாவில் இருக்கும் போது வியாபாரம் அல்லது மதம் சார்பான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் கூறினார்.

சுற்றுலா வீசாவில் சுற்றுலாப் பயணிகள் வியாபாரம், மதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கடந்த காலங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, அறுகம்பை வடைகுடா பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும், குறிப்பாக இஸ்ரேலியர்கள், சுற்றுலா விசாவில் உள்ளனர்.

விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் ஏதேனும் வியாபாரம், மதம் அல்லது வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Popular

More like this
Related

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நல்லமல்கள் நிகழும் காலம்: துல்-ஹஜ் முதல் பத்து நாட்கள்

-முஹம்மத் பகீஹுத்தீன் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக...

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்...

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...