கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Date:

இந்திய விமானம் ஒன்றுக்கு  கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில்  இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும் இது வழமைபோல் இன்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டலால் 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமையகம், விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு  சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்

மும்பையிலிருந்து கட்டுநாயக்கா வந்த மற்ற இரண்டு விமானங்களுக்கு முன்னதாகவே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...