சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறை வெற்றிகரமாக நிறைவு !

Date:

இலங்கை தனது உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் பெறப்பட்டதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கொள்கை அடிப்படையில் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டதாக செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ கடனளிப்போர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆலோசனை நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் அளவுருக்களை இலங்கையால் நிறைவு செய்ய முடிந்தது.

இந்தச் செயல்முறையை வெற்றியடையச் செய்த அனைத்து கடன் வழங்குநர்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நிதியமைச்சு மேலும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...