தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Date:

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...