நாளை இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

Date:

எல்பிட்டிய  பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தலுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்றையதினம் (25) உரிய வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் 48 வாக்குச்சாவடிகளில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுப் பட்டியலின்படி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளையதினம் (26) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளுக்காக தமது அதிகாரிகளை ஈடுபடுத்த உள்ளதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி   தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...