பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் இராஜினாமா!

Date:

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த மற்றும் ஆணையாளர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...