தொடர்ந்து 3-வது ஆண்டாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

Date:

உலகின் முன்னணி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில், ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.

தற்போது, மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 3வது ஆண்டாக, செலவுகளை குறைப்பதற்கான நோக்கில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும், கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...