வாகன இறக்குமதி தொடர்பான முக்கியத் தகவல்!

Date:

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாக்க வாகன இறக்குமதியை நிறுத்திய போது வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளதுடன் அப்போது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 200 ரூபா ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திடம் ஊடகமொன்று வினவியுள்ள நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுமென அந்த சங்கம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...