வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை!

Date:

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களிலும் உயர்ஸ்தானிகராலயங்களிலும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடியாக தவல்களை வழங்குமாறு கேட்டிருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சிறிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காக புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நிமியக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்திடம் ஊடகவியலாளர் ரிப்தி அலி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னைய அரசாங்க காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளினதும் புதல்வர்களும் உறவினர்களும் வெளிநாட்டு தூதுரகங்களின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தூதுவர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள்  நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவர்கள் முன் இருப்பதாகவும் தூதுவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...