வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Date:

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் கிருமி தொற்றுகள் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால்  விரைவில்  சிகிச்சை பெறுமாறு பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் உண்ணும் உணவுகள் சுத்தமாகவும், புதியதாகவும், சூடாகவும் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுட்டாறிய நீரை  அல்லது போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை அருந்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...