அனுரவிற்கு பெரும்பான்மை கிடைப்பதற்காக எனது கட்சி தேர்தலில் போட்டியிடாது: விமல் வீரவன்ச

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தை உடைய அரசியல் இயக்கம் என்பதாலும் ஜேவிபியின் வரலாற்று பாரம்பரியத்தை மதிக்கும் அதற்கு உரித்தான கட்சி என்பதாலும் நாங்கள் ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மக்கள் ஆணையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் என விமல்வீரவன்ச அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாகிடைப்பதற்காக ன்மை தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவின்றி அனுரகுமாரதிசநாயக்க ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்து தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கூட்டணியாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடபோவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...