அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய வரவு- செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் முன்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் அரச ஊழியர்களினது சம்பளத்தை ஜனவரி மாதத்திலிருந்து ரூ.25,000 சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த தீர்மானத்தின் படி ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிக்கப்படுமா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

அரச ஊழியர்களுக்கு மட்டடுமல்ல பொதுவாகவே சம்பள அதிகிரப்பொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாங்கள் ஏற்றுகொள்கிறோம். புதிய வரவு செலவு திட்டத்தில் இதனை உள்வாங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் புதிய வரவு செலவு திட்டம் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...