அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய வரவு- செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் முன்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் அரச ஊழியர்களினது சம்பளத்தை ஜனவரி மாதத்திலிருந்து ரூ.25,000 சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த தீர்மானத்தின் படி ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிக்கப்படுமா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

அரச ஊழியர்களுக்கு மட்டடுமல்ல பொதுவாகவே சம்பள அதிகிரப்பொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாங்கள் ஏற்றுகொள்கிறோம். புதிய வரவு செலவு திட்டத்தில் இதனை உள்வாங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் புதிய வரவு செலவு திட்டம் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...