ஒரு கட்சி, வேட்பாளர், சுயேச்சைக்குழு செலவிடும் உச்ச தொகை அறிவிப்பு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு, கட்சியொன்று அல்லது வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் செலவிடக் கூடிய தொகையை நிர்ணயித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, ஆகக் கூடுதலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் கொழும்பு (21 பேர்), கம்பஹா (22 பேர்) மாவட்டங்களில் ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு செலவிடக் கூடிய உச்சபட்ச தொகை கொழும்பு மாவட்டத்தில் ரூ. 7 கோடியே 94 இலட்சத்து 93 ஆயிரத்து 756
(ரூ. 79,493,756) எனவும் கம்பஹா மாவட்டத்தில் ரூ. 8 கோடியே 17 இலட்சத்து 35 ஆயிரத்து 55 (ரூ. 81,735,055) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சம் முறையே ரூ. 114, ரூ. 110 தொகையை செலவிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்த தொகையாக வன்னி மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் ரூ. 82 இனை செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வேட்பாளர் ஒருவர் உச்சபட்சமாக முறையே ரூ. 57 இலட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 56 இலட்சத்து 43 ஆயிரத்த செலவிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் முறையே ரூ. 34,698, ரூ. 35,677 தொகையை உச்சபட்சம் செலவிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...