‘காணாமல் போன ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகள் தேடிக் கண்டுபிடிக்கப்படும்’

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடைசியாக முன்வைக்கப்பட்ட அறிக்கை காணாமல் போனதாகவும் அறிக்கைகளில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்திருக்கின்ற தகவல்களை விசாரணை செய்து உண்மையான மற்றும் முழுமையான அறிக்கையை விரைவில் தேடிக் கண்டுபிடிப்போம் என இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதம் நியமித்த 3 பேர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை இப்போது முன்னாள் ஜனாதிபதியிடம் இருக்கிறதா அல்லது சட்டமா அதிபரிடம் இருக்கிறதா என்பதையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே பல பல குழுக்கள் நிமியக்கப்பட்டிருந்த நிலையில் இனியும் புதிய குழுக்கள் நிமியக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலி ஓய்வை அறிவித்திருந்தாலும் இந்த விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள அறிக்கைகளை அவரிடமிருந்து பெற்று விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...