சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறை வெற்றிகரமாக நிறைவு !

Date:

இலங்கை தனது உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் பெறப்பட்டதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கொள்கை அடிப்படையில் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டதாக செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ கடனளிப்போர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆலோசனை நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் அளவுருக்களை இலங்கையால் நிறைவு செய்ய முடிந்தது.

இந்தச் செயல்முறையை வெற்றியடையச் செய்த அனைத்து கடன் வழங்குநர்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நிதியமைச்சு மேலும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...