சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறை வெற்றிகரமாக நிறைவு !

Date:

இலங்கை தனது உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் பெறப்பட்டதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கொள்கை அடிப்படையில் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டதாக செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ கடனளிப்போர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆலோசனை நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் அளவுருக்களை இலங்கையால் நிறைவு செய்ய முடிந்தது.

இந்தச் செயல்முறையை வெற்றியடையச் செய்த அனைத்து கடன் வழங்குநர்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நிதியமைச்சு மேலும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...