சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறை வெற்றிகரமாக நிறைவு !

Date:

இலங்கை தனது உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் பெறப்பட்டதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கொள்கை அடிப்படையில் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டதாக செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ கடனளிப்போர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆலோசனை நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் அளவுருக்களை இலங்கையால் நிறைவு செய்ய முடிந்தது.

இந்தச் செயல்முறையை வெற்றியடையச் செய்த அனைத்து கடன் வழங்குநர்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நிதியமைச்சு மேலும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...