சீரற்ற காலநிலை; பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...